Chepauk super gillies
டிஎன்பிஎல் 2021: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார்.