
TNPL 2021 : Chepauk Super Gillies won by 24 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கௌஷிக் காந்தி 45 ரன்களையும், ஜெகதீசன் 40 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - அருண் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் அருண் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரீநிவாசனும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.