
TNPL 2021: CSG vs ITT Match has been abandoned due to rain (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கோவை - சேலம் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சதீஷ் வீசினார். அவர் வீசிய 2ஆவது பந்திலேயே தினேஷ் டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்த ஓவரில் சித்தார்த் ஒரு ரன்னில் வெளியேறினார்.