Advertisement
Advertisement
Advertisement

டிஎன்பிஎல் எலிமினேட்டர்: மீண்டும் மிரட்டிய சாய் சுதர்சன்; திண்டுக்கல்லுக்கு 144 ரன்கள் இலக்கு!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
TNPL 2021 Eliminator : Lyca Kovai Kings set a target on 144
TNPL 2021 Eliminator : Lyca Kovai Kings set a target on 144 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 11, 2021 • 09:17 PM

டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 11, 2021 • 09:17 PM

அதன்படி களமிறங்கிய கோவை அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ 5 ரன்களிலும், சுரேஷ் குமார் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Trending

இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வெங்கட்ரமனன், முகலேஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின் சாய் சுதர்சனுடன் இணைந்த கேப்டன் ஷாருக் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அரைசதம் கடந்தார்.

இதன் மூலம் 20 ஓவர்களை முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்சன் 57 ரன்களை சேர்த்தார். திண்டுக்கல் அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement