
TNPL 2021: First win for the Tamizhans in the season (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்ய பிரகாஷ் 43 ரன்களைச் சேர்த்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது, ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணியில் முகமது ஆஷிக், துஷர் ரஹெஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த சித்தார்த் - மான் பாஃப்னா இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.