
TNPL 2021 Qualifier 1 : Trichy Warriors enter the final for the first time after defeating Chepauk! (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
இதில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீரமானிதது.
அதன்படி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ராதாகிருஷ்ணனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராதாகிருஷ்ணன் 82 ரன்களைச் சேர்த்தார்.