Advertisement

டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் பந்துவீச்சில் சுருண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 13, 2021 • 21:12 PM
TNPL 2021  Qualifier 2: Dindigul Dragons Bowled out 103
TNPL 2021 Qualifier 2: Dindigul Dragons Bowled out 103 (Image Source: Google)
Advertisement

டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் - ஹரி நிஷாந்த் இணை களமிறங்கியது. இதில் விமல் குமார் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Trending


ஒருமுனையில் விக்கெட்டுகளை சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹரி நிஷாந்த் அரைசதம் அடித்து அசத்தினார். பின் அவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சேப்பாக் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. சேப்பாக் அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement