
TNPL 2021: Thiruppur Thamizhans bowled out Nellai Royal kings for 148 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணியின் கேப்டன் பாபா அபாரஜித் 14 ரன்களிலும், ரஞ்சன் பால் 20, இந்தராஜித் 26 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 43 ரன்களில விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் நெல்லை அணியின் ரன் கணக்கு சரிந்தது.