
TNPL 2021: Trichy set a target of 152 for Nellai (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி கேப்டன் பாபா அபாரஜித் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதற்கிடையில் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கிய திருச்சி அணிக்கு அமித் சத்விக் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய முகுந்த் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ராஜகோபால் ரன் ஏதுமின்றியும் பெவிலியனுக்கு திரும்பினர்.