
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸும் லைகா கோவை கிங்ஸும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 7.5 ஓவரில் 67 ரன்களை முதல் விக்கெட்டுக்கு சேர்த்து கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 37 ரன்னிலும், ஸ்ரீதர் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் முகிலேஷும், ஷிஜித் சந்திரனும் அபாரமாக பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.