
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று சேலத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முன்னதாக, டாஸ் வென்ற மதுரை பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 51 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை அஜித் ராம் மற்றும் அபிஷேக் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
எலிமினேட்டரில் வெற்றி பெற வெறும் 127 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை அணி அட்டகாசமாக ஆட்டத்தை தொடங்கி விக்கெட் இழப்பின்றி 9.5 ஓவர்களின் முடிவில் 72 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.