
TNPL title was shared between Chepauk Super Gillies and Lyca Kovai Kings as the grand finale produce (Image Source: Google)
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் முன்னேறின.
அதன்படி நேற்று இரவு கோயம்பத்தூரில் நடந்தது இந்த இறுதிப்போட்டியானது,இரவு 7.15 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், மழையால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக தொடங்கப்பட்டது.
அதன் காரணமாக ஆட்டம் 17 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக பேட்டிங் விளையாடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 65 ரன்களை குவித்தார்.