
Tom Latham Thanks Pakistan Authorities For Keeping New Zealand Players Safe (Image Source: Google)
பாகிஸ்தானில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம் செய்திருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதாக இருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்துசெய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றடைந்து, அங்கிருந்து இன்று ஆக்லாந்து சென்றடைந்தது. அதன்பின் வீரர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.