
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் யு19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முன்னேறின.
இதில் ஐக்கிய அரபு அமீரகம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியும், இந்தியா – வங்கதேசம் இடையேயான 2ஆவது அரையிறுதி சுற்றும் துபாயில் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ரஹ்மான் ரப்பி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்பின் இந்திய அணி தரப்பில் ஆதார்ஷ் சிங் – குல்கர்னி கூட்டணி களமிறங்கியது. இதில் 2ஆவது பந்திலேயே ஆதார்ஷ் சிங் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான குல்கர்னி 1 ரன்னிலும், கேப்டன் சஹரன் டக் அவுட்டிலும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் ஸ்கோர் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.