Advertisement

அண்டர் 19 உலகக்கோப்பை: யாஷ் துல், ரஷீத் அதிரடி; ஆஸ்திரேலியாவுக்கு 291 இலக்கு!

அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 02, 2022 • 22:17 PM
U19 WC 2022:India Posted 290/5 in 50 overs against Australia in the Semi-Final
U19 WC 2022:India Posted 290/5 in 50 overs against Australia in the Semi-Final (Image Source: Google)
Advertisement

அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Trending


அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் யாஷ் துல் - துணைக்கேப்டன் ஷேக் ரஷீத் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். 

அதன்பின் சிறப்பாக விளையாடிய யாஷ் துல் சதமடிக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையடுத்து யாஷ் துல் 110 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகினார். அதன்பின் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் நிஷந்த் சிந்து, தினேஷ் பானா ஆகியோர் 27 ரன்களைச் சேர்த்தனர்.

 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களைக் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யாஷ் துல் 110 ரன்களைச் சேர்த்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement