Advertisement

அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம் - ஐடன் மார்க்ரம்!

இந்த மைதானத்தில் 290 ரன்களை எளிதாக சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர் என தென் ஆப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 22, 2023 • 13:04 PM
அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம் - ஐடன் மார்க்ரம்!
அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம் - ஐடன் மார்க்ரம்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம்,“நாங்கள் இந்த தொடரில் நல்ல நிலையில் இருந்ததாகவே உணர்கிறேன். அதேபோன்று ஒவ்வொரு தொடரின் போதும் முடிவை தீர்மானிக்கும் போட்டி நடைபெறும் போது சிறப்பாக இருக்கும். இந்த தொடரின் முடிவு தீர்மானிக்கும் இந்த போட்டியின் போதும் மைதானம் முழுவதுமாக ரசிகர்கள் நிரம்பி சிறப்பான ஆதரவினை வழங்கி இருந்தனர். 

Trending


ஆனால் எங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது. இருந்தாலும் நாங்கள் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவே நினைக்கிறேன். இந்த மைதானத்தில் 290 ரன்களை எளிதாக சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். 

அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம். எதிர்வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement