
Use This Hurt To Achieve More: Jos Buttler To Rajasthan Royals Teammates (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களை எடுத்திருந்தார்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐபிஎல் கோப்பையையும் வென்று அசத்தியது.