Advertisement

 ‘இந்த காயத்தை எதிர்காலத்தில் மேலும் சாதிக்க பயன்படுத்தவும்’ - ஜோஸ் பட்லர்

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததன் " இந்த காயத்தை பயன்படுத்தி, எதிர்காலத்தில் மேலும் சாதிக்க முயற்சிப்போம்" என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 30, 2022 • 14:27 PM
Use This Hurt To Achieve More: Jos Buttler To Rajasthan Royals Teammates
Use This Hurt To Achieve More: Jos Buttler To Rajasthan Royals Teammates (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களை எடுத்திருந்தார்.

Trending


அதன்பின் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐபிஎல் கோப்பையையும் வென்று அசத்தியது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததன் "காயத்தை பயன்படுத்தி, எதிர்காலத்தில் மேலும் சாதிக்க முயற்சிப்போம்" என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பட்லர், “இறுதிப் போட்டியைத் தவிர சீசனுக்கான எனது எதிர்பார்ப்புகளை எல்லாம் மீறிவிட்டேன். ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது அணிக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள், அவர்கள் தகுதியான சாம்பியன்கள். எனது அணிக்காக விளையாடுவதும், சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதும் எனது குறிக்கோள்.

குறுகியதாக வந்தாலும் (இறுதியில்) அணியில் உள்ள அனைவரின் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அது என்னிடமே பேசுகிறது. எனது கேரியரில் பல இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளேன். ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடுவது ஒரு முழுமையான பாக்கியம். எனது அணியினரை நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த காயத்தை எதிர்காலத்தில் மேலும் சாதிக்க பயன்படுத்தவும்” என தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 4 சதங்களை விளாசி, அதிக ரன்களைச் சேர்த்தவருக்கான விருதினை வென்றுள்ள ஜோஸ் பட்லர், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement