Advertisement
Advertisement
Advertisement

எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!

எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.

Advertisement
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 31, 2024 • 01:33 PM

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்டிங்கில் சரியாக சோபிக்காத பட்சத்திலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 ரன்களை சேர்த்திருந்தார். இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 31, 2024 • 01:33 PM

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அசத்தலான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். இதில் நிஷங்கா 26 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேராவும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் குசால் மெண்டிஸ் 43 ரன்களிலும், குசால் பெரேரா 46 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பினர். 

Trending

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியும் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்க்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட இலங்கை அணி 2  ரன்களுக்கே 2 விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அதன்பின் சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. 

இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா, “எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். அதற்கான முக்கிய காரணம் மிக மோசமான ஷாட் தேர்வுதான். அதேசமயம் சுழற்பந்து வீச்சாளர் பந்துவீசிய காரணத்தினாலேயே வநிந்து ஹசரங்காவை நாங்கள் முன்கூட்டியே களமிறக்கினோம். 

மேலும் அவர் சுதந்திரமாக விளையாடி சில பவுண்டரிகளை அடிக்கவும் நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அது நாங்கள் நினைத்ததைப் போன்று வேலை செய்யவில்லை. அதுதவிர்த்து இந்த ஆடுகளத்தில் எங்களின் தவறான ஷாட் தேர்வுகள் காரணமாக எங்களால் இலக்கை எட்டமுடியவில்லை. நிச்சயமாக இந்த இலக்கானது எட்டக்கூடிய ஒன்றுதான். அதற்காக நாங்கள் சாக்கு சொல்ல விருமபவில்லைல் .

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாகிய நாம் இதை விட கொஞ்சம் அதிகமாக செய்ய வேண்டும். டி20 போட்டிகள் போல் அல்லாமல், ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்டிங் ஆட்டத்தை காண விரும்புகிறேன். எங்கள் முதல் மூன்று மற்றும் நான்கு பேர் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். அதுதான் தற்போது எனக்குள்ள ஒரே பாசிட்டிவ். எங்கள் அணியின் இளம் வீரர்கள் ஒருநாள் தொடரில் ஏதாவது சிறப்பாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement