
வரும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் நிறுவனமும், டிஜிட்டல் உரிமையை வியாகாம் மற்றும் டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றின.
கடந்த ஆண்டு வரை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்த நிலையில், ரிலையன்ஸின் வியாகாம் உள்ளே நுழைந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அதுவும் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.23,758 கோடிக்கு வியாகாம் ஏலத்தில் எடுத்திருந்தது.
இந்நிலையில் ஹாட்ஸ்டாரை மிஞ்சும் அளவிற்கு புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தில் குறிப்பிட்ட அளவிலான ஆங்கிளில் கேமராக்கள் பொருத்தப்படும். அதனை உடனடியாக எடிட் செய்து ஒளிபரப்புவார்கள்.