
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் குயிண்ட்ஸ்லேண்டில் நேற்று தொடங்கியது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் இது 2ஆவது பகலிரவு டெஸ்ட்.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 51 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் மந்தனா. 2013க்குப் பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட 39 அரை சதங்களில் குறைந்த பந்துகளில் அரை சதமெடுத்தவர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. 25 ஓவர்கள் வரை தொடக்கக் கூட்டணி நீடித்தது.
அதன்பின் ஷஃபாலி அளித்த மூன்று கேட்சுகளை ஆஸி. வீராங்கனைகள் தவறவிட்டார்கள். ஆனால் 26-வது ஓவரின் முதல் பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷஃபாலி வர்மா. முதல் விக்கெட்டுக்கு மந்தனாவும் ஷஃபாலியும் 93 ரன்கள் சேர்த்தார்கள்.