விஜய் ஹசாரே கோப்பை: சித்தார்த் அதிரடியில் காலிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!
ராஜஸ்தானுக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கர்நாடகா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கர்நாடகா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், தீபக் ஹூடாவின் அதிரடியான சதத்தினால் 200 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 109 ரன்களைச் சேர்த்தார். கர்நாடக அணி தரப்பில் விஜயகுமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய கர்நாடக அணியில் படிக்கல் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய ரவிக்குமார் சமர்த், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மனீஷ் பாண்டே ஆகியோர் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இதன் மூலம் கர்நாடக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரஜஸ்தான் அணியை வீழ்த்தி விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now