விஜய் ஹசாரே கோப்பை: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது தமிழ்நாடு!
பெங்கால் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 87 ரன்களையும், பாபா இந்திரஜித் 64 ரன்களையும் சேர்த்தனர். பெங்கால் அணி தாரப்பில் முகேஷ் குமார், அங்கித் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய பெங்கால் அணி சிலம்பரசனின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 39.1 ஓவரிலேயே பெங்கால் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் தமிழ்நாடு அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now