
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்டிலாவது அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டிகான பிளேயிங் லெவனிலும் அஸ்வின் இடம்பெறவில்லை.
இதற்கு காரணம் இங்கிலாந்தில் சுழற்பந்துவீச்சுக்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியே எல்லா அணிகளும் களமிறங்கும். அதிகபட்சமாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளலாம்.
முதல் டெஸ்ட் முடிந்த பிறகு கோலி கூறியதாவது “இந்தத் தொடரில் இதே பந்துவீச்சுக் கூட்டணியுடன் தான் (4 வேகப்பந்து வீச்சாளர்கள் + ஒரு சுழற்பந்துவீச்சாளர்) விளையாட வாய்ப்புள்ளது. அதேநேரம், சூழலுக்கு ஏற்றாற்போல அணியில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் எங்களுடைய பலம். இந்தப் பந்துவீச்சுக்கூட்டணிதான் முன்னேறிச் செல்ல சரியாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.