Advertisement

இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது - சேவாக் காட்டம்!

இலங்கை தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan July 25, 2021 • 14:56 PM
Virender Sehwag Says Manish Pandey May Not Get A Chance For India Again
Virender Sehwag Says Manish Pandey May Not Get A Chance For India Again (Image Source: Google)
Advertisement

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடங்க இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி அசத்தியுள்ளனர். அதிலும் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார் ஆகியோர் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Trending


இந்நிலையில் இத்தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சேவாக், “இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இடம்பெற்ற மணிஷ் பாண்டே தன்னை நிரூபிக்க தவறிவிட்டார். இந்த தொடரில் மணிஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா ஆகியோர் ரொம்பவே திணறினார்கள் அவர்களின் ஆட்டம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

மூன்று போட்டிகளிலுமே மனிஷ் பாண்டேவால் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை.அதனால் அவருக்கு இனிமேல் அணியில் வாய்ப்பு கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இனிவரும் போட்டிகளில் மனீஷ் பாண்டேவிற்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement