Advertisement

என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம் - சவுரவ் கங்குலி உறுதி!

இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 14, 2021 • 15:48 PM
VVS Laxman Will Head National Cricket Academy: Sources
VVS Laxman Will Head National Cricket Academy: Sources (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. அவர் உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.

இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குப் பலரது பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில், கடைசியாக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

Trending


பிசிசிஐ விதிகளின்படி ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதால், ராகுல் டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்படலாம் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே செய்திகள் வெளியானது. 

முதலில் விவிஎஸ் லட்சுமண் மறுத்தாலும் பின்னர், பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலியே தனிப்பட்ட முறையில் லட்சுமணிடம் பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமண் ஏற்கவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் கங்குலி உறுதி செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நிர்வாக பொறுப்பில் இருப்பது எப்போதும் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பதே கங்குலியின் நிலைப்பாடு. அவர் எடுத்த தீவிர முயற்சிக்குப் பின்னரே ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கச் சம்மதித்தார்.

Also Read: T20 World Cup 2021

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பயிற்சியாளரோடு என்சிஏ தலைமையும் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்த சூழலில் மீண்டும் டிராவிட் - லட்சுமண் கைகோர்க்கும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு அதிக நன்மைகளைத் தரும் என்பதால் பிசிசிஐ தலைவர் கங்குலி மட்டுமின்றி செயலாளர் ஜெய் ஷா உட்பட முக்கிய நிர்வாகிகளும் அதையே தான் விரும்புகின்றனர். விவிஎஸ் லட்சுமணன் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாலேயே முதலில் இந்தப் பதவியை ஏற்கத் தயக்கம் காட்டினார்” என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement