
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போதிலிருந்து மோசமாக விளையாடி வருகிறார். ஐபிஎல் டி20 தொடரில் பேட்டிங் மிக மோசமாக இருந்ததால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஓரம் கட்டி பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடங்கியபின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் வார்னர் 14 ரன்னில் சொதப்பி ஆட்டமிழந்தார். இதனால் டேவிட் வார்னர் பேட்டிங் ஃபார்ம் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், கேப்டன் ஆரோன் பின்ச், அதை மறுத்தார். வார்னர் பேட்டிங் குறித்து தனக்கு நன்கு தெரியும் என்றும், அவர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்றும் ஆரோன் பின்ச் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து வாய் திறந்துள்ள டேவிட் வார்னர்,“என்னுடைய கண்ணோட்டத்தில், என்னுடைய பேட்டிங் ஃபார்ம் குறித்து சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இவர்கள் பேசுவதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. இதுவரை நான் எந்தப் போட்டியிலும் கிரிக்கெட் விளையாடவில்லையே. ஐபிஎல் தொடரில் நான் 2 போட்டிகள் மட்டும்தான் ஆடினேன். மற்ற அனைத்து வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வழிவிட்டேன். எப்படி என்னுடைய ஃபார்ம் பற்றிப் பேசுகிறார்கள்?