
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா 17 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 33 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அதேபோன்று பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாண்டியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினையும் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.