
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. கடந்த பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடைபெற்ற இந்த தொடரின் 3 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.
அத்துடன் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த டி20 தொடரில் ஏற்கனவே 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா தற்போது பெற்ற வெற்றியால் கடைசியாக நடந்த 3 அடுத்தடுத்த டி20 தொடர்களில் ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றியை பெற்று அசத்தியது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்த டி20 தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட வேளையில் வாய்ப்பில்லாமல் நீண்ட நாட்கள் தவிர்த்து வந்த வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நீண்ட நாட்களுக்கு பின் இத்தொடரில் இந்தியாவிற்காக விளையாடினார்.