Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வாசிம் ஜாஃபர்!

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்று வாசிம் ஜாஃபர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Advertisement
Wasim Jaffer makes perfect prediction about IPL 2021 final that's bound to come true
Wasim Jaffer makes perfect prediction about IPL 2021 final that's bound to come true (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 15, 2021 • 06:16 PM

ஐபிஎல் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் ஏற்கனவே 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கேவும், 2 முறை கோப்பையை வென்றுள்ள கேகேஆரும் மோதுகின்றன. துபாயில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 15, 2021 • 06:16 PM

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

Trending

அந்தவகையில், இதுகுறித்து டுவீட் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர், “உலக கோப்பை வின்னிங் கேப்டன் மற்றும் நியூசிலாந்து பயிற்சியாளரை பெற்றிருக்கும் அணி தான் கோப்பையை வெல்லும்” என்று கூறியுள்ளார்.

 

இன்றைய இறுதிப்போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளின் கேப்டன்களுமே உலக கோப்பையை வென்ற கேப்டன்கள் தான். மேலும் 2 அணிகளின் பயிற்சியாளர்களுமே நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் தான். சிஎஸ்கே கேப்டன் தோனி 2011ஆம் ஆண்ட்டிலும், கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன் 2019லும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றவர்கள். சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் மற்றும் கேகேஆர் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகிய இருவருமே நியூசிலாந்தை சேர்ந்தவர்கள்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இறுதிப் போட்டியில் மோதும் இந்த 2 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லமுடியும் என்பதை நாசூக்காக கூறியுள்ளார் வாசிம் ஜாஃபர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement