
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ராஹ் என சீனியர் வீரர்கள் அனைவருக்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரிஷப் பந்த் இந்த தொடருக்கான இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணியில் அதிகமான இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளது, இரண்டு போட்டியிலும் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்திய அணி கடந்த இரண்டு போட்டியிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே போல் கடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தான தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.