அல் வக்கீல் கிரிக்கெட் லீக் போட்டியில் ஆடியோனிக் - ஆட்டோமால் அணிகள் மோதின. அப்போது ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் ஆட்டோமால் அணி வெற்றி பெற கடைசிப் பந்தில் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டன.
ஆட்டோமால் பேட்டர் சிக்ஸர் அடிக்க முயல, பந்து அவ்வளவு தூரமெல்லாம் செல்லவில்லை. லாங் ஆஃப் பக்கம் சென்றது. அதை ஆடியோனிக் ஃபீல்டர் தடுத்தார். அப்படியே த்ரோ வீசியிருந்தால் வெற்றி கை மேல் வந்து விழுந்திருக்கும். ஆனால் ரன் அவுட் செய்வதற்காக லாங் ஆஃப் பக்கமிருந்து பந்துடன் ஓடி வந்து நடுவர் பக்கமிருந்த ஸ்டம்புகளை வீழ்த்தினார் அந்த ஃபீல்டர்.
அப்போது ஒரு பேட்டர் கிரிஸுக்குள்ளேயே தான் இருந்தார். இதனால் இன்னொரு பேட்டரை ரன் அவுட் செய்ய முயன்றார் ஃபீல்டர். எதற்கு இப்படிச் செய்தார் என்றுதான் புரியவில்லை. அப்படியே விட்டிருந்தாலும் எதிரணியால் ஒரு ரன் தான் எடுத்திருக்க முடியும். ஆனால் முட்டாள்தனமானச் செயல்பட்டு பேட்டரை ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் பக்கம் ஓடோடிச் சென்றார்.