பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக புதிய விதியை உருவாக்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் புதிய விதிமுறையை உருவாக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Watch: Ball Hits The Stumps But Ben Stokes Doesn't Get Bowled (Image Source: Google)
ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட், சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 31ஆவது ஓவரை கிரீன் வீசினார். அவருடைய முதல் பந்து ஸ்டோக்ஸை போல்ட் செய்தது.
இதனால் தப்பித்த ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடி 66 ரன்கள் எடுத்துக் கடைசியில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்து ஸ்டம்பில் பட்டும் பைல்ஸ் கீழே விழாத சம்பவம் கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தருணங்களில் பேட்டரை அவுட்டாக்கி வெளியேற்ற வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர், “பந்து ஸ்டம்புகளில் மோதி பைல்ஸ் கீழே விழவில்லையென்றால் ஸ்டம்புகளில் மோதிய பந்து என (விக்கெட்டை அளிக்கும்) ஒரு விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டுமா? எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? பந்துவீச்சாளர்களுக்கு நியாயமாக நடந்துகொள்வோம்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.Should a law be introduced called ‘hitting the stumps’ after the ball has hit them but not dislodged the bails? What do you think guys? Let’s be fair to bowlers!@shanewarne#AshesTestpic.twitter.com/gSH2atTGRe
— Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2022
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News