
அபுதாபி டி10 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் டீம் அபுதாபி மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி அணி முதலில் பந்துவீசவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மோரிஸ்வில்லே அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 10 ரன்களிலும், அசலங்கா 8 ரன்களிலும், முஸ்தஃபா 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து சர்ஜீல் கான் 28 ரன்னிலும், ஆண்ட்ரிஸ் கௌஸ் 27 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மோரிஸ்வில்லே அணியானது 9.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டீம் அபுதாபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோர்டன் கிளார்க் 4 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, நூர் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய அபுதாபி அணியில் பில் சால்ட் 9 ரன்னிலும், மைக்கைல் பெப்பர் 2 ரன்னிலும், கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், லௌரி எவான்ஸ் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.