
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் செய்ய வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டதோடு, பெரிய இலக்கையும் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சென்னை அணி சார்பாக வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை களமிறங்கியது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் நிதானம் காத்த நிலையில், 2வது ஓவரை வீசிய நலக்கண்டே பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சென்னை ரசிகர்களுகு இன்ப அதிர்ச்சியாக அந்த பந்து நோ-பால் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அடுத்த இரு பந்துகளில் சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி ருதுராஜ் பதிலடி கொடுத்தார்.
இதனிடையே 4 ஓவர்கள் கடந்தும் விக்கெட் எடுக்க முடியாததால், உடனடியாக ரஷித் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அப்போது சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுக்கவில்லை. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்திருந்தது. ஒருபக்கம் கான்வே நிதானம் காத்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் வெளுத்து வாங்க தொடங்கினார்.