
ராகுல் திவேத்தியா என்ற பெயரை நாம் 2020 ஆண்டு முதல் தான் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் அவர் 2014ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ராகுல் திவாட்டியா 2014ஆம் ஆண்டே ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2017ஆம் ஆண்டு பஞ்சாப், 2018ஆம் ஆண்டு டெல்லிக்கு விளையாடிய ராகுல் திவேத்தியா, அப்போது ஒரே இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பராக இல்லாத வீரர் என்ற பெருமையை படைத்தார்.
ராகுல் திவேத்தியா புகழ் உச்சிக்கு சென்று 2020ஆம் ஆண்டு சீசனில் தான். பஞ்சாப்க்கு எதிராக 224 ரன்கள் சேஸ் செய்யும் போது, திவாட்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கியதால் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.