
WATCH: Reece Topley's Record Breaking 6/24 Against India In 2nd ODI (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லண்டன் லார்ட்ஸில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் அடிக்க, 247 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 100 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், ரீஸ் டாப்ளியின் சிறப்பான பவுலிங் தான். அபாரமாக பந்துவீசிய ரீஸ் டாப்ளி, 9.5 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதனால் தான் இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.