Advertisement

தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் காணொளி!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தந்தையானதை பாராட்டும் வகையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஒன்றை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 10, 2023 • 22:09 PM
தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் காணொளி!
தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு நகரில் தொடங்கிய சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கியமான போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஏற்கனவே இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளியான வானிலை அறிக்கையில் போட்டியின் போது மழை குறுக்கிடும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டேவில் போட்டியை நடத்த வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கையை வைத்திருந்தது.

அதோடு ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியினை முழுமையாக காண வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்ததால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான ரிசர்வ் டேவை (செப்டம்பர் 11) அறிவித்திருந்தது. அந்த வகையில் செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டி மழையால் தடை பட்டால் செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Trending


ஆனால் இன்றைய போட்டி ஆரம்பித்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 24.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்திருந்த வேளையில் மழை பெய்ததால் மீண்டும் போட்டி நடைபெற சாத்தியமில்லாமல் போனது. அதன் காரணமாக இன்று போட்டி கைவிடப்பட்டதாகவும் நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று போட்டி தொடங்கி 24.1 ஓவர்கள் வரை இந்திய அணி விளையாடி விட்டதால் சில மணி நேரங்கள் காத்திருந்த நடுவர்கள் மைதானத்தின் தன்மையை சோதித்தனர். ஆனால் மீண்டும் இன்று போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை என்பதால் போட்டி நாளை நடைபெறும் என்று அறிவித்தனர். ஒருவேளை மீண்டும் போட்டி இன்றே தொடங்கி இருந்தால் 34 ஓவர்கள் வரை தான் நடைபெற்று இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்று போட்டி மீண்டும் துவங்காமலே கைவிடப்பட்டதால் நாளை முழுவதுமாக இந்திய அணி 50 ஓவர்கள் பேட்டிங் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்றைய போட்டி கைவிடப்பட்ட 24.1 ஓவரில் இருந்தே நாளை இந்திய அணி பேட்டிங்கை ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் தான் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன்  தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா தந்தையானதை பாராட்டி ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஒன்றை கொடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பும்ரா, அஃப்ரிடியை கட்டித்தழுவி நன்றியை தெரிவித்தார். இந்நிலையில் இருவருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement