
WATCH: U19 World Cup-Winning Captain Yash Dhull Smacks A Ton On His Ranji Trophy Debut (Image Source: Google)
87 வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. முதலில் குரூப் பிரிவு போட்டிகள் வரும் மார்ச் 18ஆம் தேதி வரையும். பின்னர், மே இறுதியில் நாக் அவுட் சுற்று போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தியில் நடைபெற்று வரும் குரூப் ஹெச் பிரிவில் தமிழக அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தமிழக வீரர்கள் சிறப்பாக பந்துவீச டெல்லி அணியில் துருவ் சோரே 1 ரன்னிலும், ஹிம்மட் சிங் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் டெல்லி அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது.