நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம் - அஜிங்கியா ரஹானே!
இது ஒரு சிறந்த ஆட்டம், இறுதியில் நாங்கள் 4 ரன்களில் மட்டுமே இந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் ஐடன் மாக்ரம் 47 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 238 ரன்களைக் குவித்தது.
Trending
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே 61 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 45 ரன்களையும், இறுதிவரை போராடிய ரிங்கு சிங் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய அஜிங்கியா ரஹானே, “இது மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது. டாஸில் நான் சொன்னது போல், 40 ஓவர்கள் முழுவதும் விக்கெட் பேட்டிங் செய்ய நன்றாகவே இருந்தது. நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம், இது ஒரு சிறந்த ஆட்டம், இறுதியில் நாங்கள் 4 ரன்களில் மட்டுமே இந்த தோல்வியைத் தழுவியுள்ளோம். இதில் 230 ரன்களுக்கு மேல் துரத்தும்போது, விக்கெட்டுகளை இழப்பது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும்.
Also Read: Funding To Save Test Cricket
பேட்டிங் செய்ய இது சிறந்த விக்கெட்டுகளில் ஒன்றாகும். பேட்டர்கள் களமிறங்க சிறிது நேரம் எடுக்க வேண்டியிருந்தது. எங்களிடம் உள்ள பந்துவீச்சு தாக்குதலைக் கொண்டு, நாங்கள் மிடில் ஓவர்களை நன்றாகக் கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனல் இன்று சுனில் நரைன் கொஞ்சம் சிரமப்பட்டார். சுனில் மற்றும் வருண் வழக்கமாக மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், ஆனால் இன்றைய தினம் பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now