
We have come up with plans against the youngsters - Tim Southee (Image Source: Google)
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை (ஜூன் 18) சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, ரிஷப் பந்த், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காக புது யுக்திகளை கையாளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.