
ஐபிஎல் 15ஆவது சீசனின் 33ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.மும்பை இன்னிங்ஸ்:
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா 0 (2), இஷான் கிஷன் 1 (0) இருவரும் முதல் ஓவரிலேயே முகேஷ் சௌத்ரியிடம் விக்கெட்களை பறிகொடுத்தனர். அடுத்து சூர்யகுமார் யாதவ் 32 (21), திலக் வர்மா 51 (43), க்ரிதிக் ஷோகீன் 25 (25) ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 155/7 ரன்களை சேர்த்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் கோல்டன் டக் ஆனார். அடுத்து ராபின் உத்தப்பா 30 (25), அம்பத்தி ராயுடு 40 (35), டுவைன் பிரிடோரியஸ் 22 (14) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இறுதியில் நான்கு பந்துகளில் 14 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அப்போது தோனி ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 156/7 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தோனி 28 (13) கடைசிவரை களத்தில் இருந்தார்.