
ஆஸ்திரேலியா அணி இன்று உலகக்கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வது என தவறான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் ஜோடி சேர்ந்து தொடர்ச்சியாக 14 ஓவர்கள் வீசி, தென் ஆப்பிரிக்காவின் முதல் நான்கு விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு பறித்தார்கள்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 48 வது ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் இந்திய அணிக்கு எதிராக குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி விளையாட இருக்கிறது.
இந்நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, “ இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பைனலில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கட்டும். இன்றைய ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டியில் எங்களுடைய திறமையை மற்றும் போராட்ட குணம் ஆகியவற்றை நாங்கள் வெளிப்படுத்தினோம்.