
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணகில் சமனில் முடித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியதுடன், வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியனது நாளை (டிசம்பர் 12) செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் மோதும் மூன்று போட்டிகளை உள்ளடக்கிய டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி செயின்ட் வின்செண்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த டி20 தொடருக்கான வங்க்தேச அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.