
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 31 ரன்களையும், ஜடேஜா 27 ரன்களையும் குவித்தனர்
பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரையும் அவர்கள் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான், “இறுதியாக தற்போது தான் எனக்கு மூச்சே வருகிறது. இந்த கோடை முழுவதுமே எங்களுக்கு கடினமாக இருந்தது. பல போட்டிகளை நாங்கள் நெருக்கத்தில் சென்று தோற்றுள்ளோம்.