Advertisement
Advertisement
Advertisement

மகளிர் ஆஷஸ்: மழையால் மூன்றாவது டி20போட்டி கைவிடப்பட்டது!

மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 23, 2022 • 12:01 PM
Women's Ashes: Third T20I abandoned due to rain
Women's Ashes: Third T20I abandoned due to rain (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 

இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியது.

Trending


இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பின் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி அடிலெய்டில் நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால் இன்றைய தினமும் அடிலெய்டில் தொடர் மழை நீடித்தது. இதன் காரணமாக மூன்றாவது ஆஷஸ் டி20 போட்டி டாஸ் போடப்படமலேயே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மகளிர் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளதால் அதன் முடிவுகள் அடிப்படையில் தொடரில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement