
சர்வதேச அளவில் மிக பலமான அணியாக வலம் வந்த தென்ஆப்பிரிக்காவில் தற்போது பல குழப்பங்கள் நடந்து வருகிறது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் பலரும் தற்போது சர்வதேச போட்டியில் வேண்டுமென்றே களமிறக்கப்படாமல் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்க அணியின் சீனியர் வீரர்களான டூபிளசிஸ், இம்ரான் தாஹீர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு பெறவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த டூபிளெசிஸுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளார். 34 வயதாகும் மோரிஸ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிக்கொடுத்துள்ளார். அதில் அவர், “அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன் என்று கூறுபவன் கிடையாது. ஆனால் தென்ஆப்பிரிக்க அணிக்காக நான் இனி கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்பது உறுதி. என்னுடைய நிலைபாடு என்ன என்பது கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியும். அந்தவகையில் இனி நான் விளையாட மாட்டேன் என அவர்களுக்கு புரிந்து இருக்கும்.