
இந்தியாவில் அடுத்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் ஐசிசி யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கெடு விதித்துள்ளது. அதன் காரணமாக இந்திய அணியும் நேற்று தங்களது அதிகாரபூர்வ 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டது.
இந்த பட்டியலில் முன்னணி வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெறாதது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. மேலும் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்ட வேளையில் சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அவரை கழட்டி விட்டதால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறனை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தி இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை காட்டிலும் சஞ்சு சாம்சன் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் அணியில் இடம் பெற்று இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.