
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. முன்னதாக உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளன. அதன்படி நாளை முதல் பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ளன.
அதேசமயம் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது போன்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இதில் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறாத தென் ஆப்பிரிக்க அணியின் மீதும் ஒருசிலர் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அதற்கேற்றவாரு சமீபத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரையும் வென்று புது தெம்புடன் அந்த அணி இத்தொடரை எதிர்கொள்ளவ்ள்ளது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.