
துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அபாரமான விளையாட்டை நியூசிலாந்து அணியினர் வெளிப்படுத்தி வந்தனர். இறுதிப்போட்டியில் கூட நியூசிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால், இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தன்னுடைய முதல் டி20 வெற்றிக்கோப்பையை பெற தவறியது நியூசிலாந்து.
இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் வெற்றி- தோல்விகளை விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.
கம்பீர் கூறுகையில், “எனக்கு இந்திய அணிக்குப் பின்னர் மிகவும் பிடித்த அணி என்றால் அது நியூசிலாந்து தான். நான் பார்த்த வரையில் அவர்களை மிகவும் குறைவாக நடத்துவது நல்லதாகப் படவில்லை. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளுக்கு 172 ரன்கள் என்பது மிகச்சிறந்த ஸ்கோர்தான். ஆனால், அன்றைய தினத்தில் அவர்கள் எந்த அணிக்கு எதிராகப் போட்டியிடுகிறார்கள் என்பது வெற்றி வாய்ப்பை மாற்றிவிட்டது. நியூசிலாந்தின் ஆட்டம் அன்றைய தினத்தில் சிறப்பாக அமையவில்லை.