
WTC Final: Can India Still Change The Playing XI? (Image Source: Google)
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று சவுத்தம்டன் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் தொடங்குவதாக இருந்தது. நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றைய முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை வரை சவுத்தம்ப்டனில் வானிலை நன்றாக இருந்தது. இதனால் இந்தியா அணி நேற்றைய தினமே அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது. இந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருந்தனர்.
முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், போட்டி நடைபெறும் ஐந்து நாட்களும் மழை பெய்யும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.